Friday 10 February, 2012

பங்குச்சந்தை (A-Z)

பங்குச்சந்தை அடிப்படைகள் :-




பங்குசந்தையில் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

 1 . பொறுமை
 2 . கற்றல் அறிவு
 3 . அதிர்ஷ்ட்டம்.

1 . பொறுமை 

இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று, எந்த ஒரு நேரத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.


2 . கற்றல் அறிவு

ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று. பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள்.


3 . அதிர்ஷ்ட்டம் 

பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.


பங்குச்சந்தைகளில் பெரும்பாலோனர் பணத்தை இழப்பது ஏன்?




1 . பேராசை


2 . நிதானமின்மை


3 . அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்.


பங்குச்சந்தையில் வெற்றி பெற வழி



1 . Stock Selection (தேர்ந்தெடுத்தல்)

2 . Entry (செயல்படுத்தல்)

3 . Exit (வெளியேறுதல் )

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

பகுதி பகுதி யாக முதலீடு செய்யவும்.

இறங்கும் சந்தையில் குறைந்த லாபத்திலோ அல்லது நட்டத்திலோ விற்று முதலீ ட்டை காப்பாற்றவும்

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

இவை அனைத்தும் என் சொந்த அனுபவமே (தொடரும் ...)

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: